|
158. பேராயத் தலைவர் தமிழ்நாட்டுப் படிநிகராளியர் (பிரதிநிதிகள்) ஆகாமை |
|
பண் - (காம்போதி) |
ப. |
| ஆராயின் தமிழ்நாட்டிற் பேராயத் தலைவரே | | ஆவாரோ படிநிகராளியர் எத்துணையும். |
|
து. ப. |
| ஓரேடும் இலக்கியம் பாரா திருப்பதுடன் | | ஓவாத தமிழ்மீதும் உற்றாரோ பற்றினையும். (ஆரா) |
|
உ. |
| சீரான பலகலை ஆராய் கழகத்தமிழ்ப் | | பேரா சிரியருமே தேராத வரலாறு | | பேரேனும் எழுதாதார் பாராளுமன் றகராத் | | தேராயம் எங்ஙனம்ஓர் கூறேனும் தெரியாறு (ஆரா) |
|
159. இலவசக் கட்டாயத் துவக்கக்கல்வி |
|
'அந்தரங்கமாக வந்த நீர்' என்ற மெட்டு |
பண் - (அமிசதொனி) தாளம் - ஈரொற்று |
ப. |
| இந்தியாவின் முந்து தேவையும் என்னவென்றே தான் - நன்றாய் எண்ணியின்றே காண். |
|
அ. 1 |
| எழுதப்படிக்கத் தெரியார் நூற்றிற்கே இருப்பர் எண்பது பேர் | | இலவசக் கட்டாயத் துவக்கக் கல்வி இயன்று வருதல் சீர் - அதற்(கு) ஏற்பாடு செய்தல் நேர் (இந்தி) |
|
2 |
| கள்ளுண்ணாமையால் வருநலங்களே கைகண்ட வேனும் | | கல்வியை முதற்கொண்டு வராமலே தள்ளி வைத்திடுதல் - வண்டி | | தனைமா முன்னிடுதல் (இந்தி) |
|