பக்கம் எண் :

136இசைத்தமிழ்க் கலம்பகம்

3
தீண்டாமைதனை ஒழிக்கச் செய்வழி தேரின் நன்றாமோ
தெள்ளிய கல்வி திளைப்பின் தாழினம் தேறும் துப்புரவு - அதால் தேற்றம் தொட்டுறவு
(இந்தி)
160. இருவகை யதிகாரம்
'தலைவாரிப் பூச்சூடி உன்னை' என்ற மெட்டு
1
அதிகாரம் இருவேறு வகையாம் - அவை
    ஆளும் வினைகல்வி யறிவென்னுந் தகையாம்
எதுவேனும் வரைமீறின் மிகையாம் - அதே
    எய்தும்தண் டனையொன்றும் இல்லாயின் நகையாம்
(அதி)
2
அதிகாரம் ஒன்றேஇன் னொன்றை - மிக
    அடையின் அதால்என்றும் ஆகுமோ நன்றே
மதிவாணர் எளியோர்தாம் என்றே - தமிழ்
    மன்றேறி யாளுதல் மந்திரிக் கன்றே
(அதி)
3
ஒழுகும் நடையறி வாளி - கோணின்
    உண்டான தண்டனைக் குரியநல் லாளி
மொழியின் நடைஅர சாளி - கோணின்
    முறையாகத் தீர்ப்பாகும் முழுக்குற்ற வாளி
(அதி)
4
குலத்தைக் கெடுத்துமுன் னேறும் - தீய
    கோடரிக் காம்புகள் கோணியே கூறும்
நலத்தைக் கெடுக்காத வாறும் - தமிழ்
    நாடாளு வோர்இதை நன்றாகத் தேறும்.
(அதி)