பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்137

5
அறிவுத் துறையதி காரம் - என்றும்
    அழியாமல் நிற்கும்இவ் வுலகென்பார் யாரும்
அரசுற்ற புல்லதி காரம் - மக்கள்
    அளிக்கின்ற குடவோலை நின்றாலே தீரும்
(அதி)
161. தமிழர் ஏமாற்றம் அடைந்தமை
'வானபராபரனே' என்ற மெட்டு
1
தேவரும் அசுரருமே - சேர்ந்து
திருப்பாற் கடல்க டைந்தார்
தீவிய சுரை கண்டதும் - தேவர்
திடுமென்று கவர்ந்து கொண்டார்
ஆவலொடுபன் னெடு நாள் உழந்தும்
அசுரர் அவல முண்டார்                 (தேவரும்)
2
வடவரும் தென்னவரும் - ஆங்கில
வல்லரசைக் களைந்தார்
வடவர்தம் இந்தியையே - ஆளும்
வன்மொழி யாத்துணிந்தார்
மடமையை இன்றே தென்னவர் உணர்ந்து
வண்டமிழ் காத்திடுவீர்.                 (தேவரும்)
162. நேருவின் சொற்பிறழ்வு
(இசைந்த மெட்டிற் பாடுக)
ப.
மாறி விட்டாரே - நேரு சொல்
மாறி விட்டாரே
து. ப.
தேறியுற்ற தென்னகத்தைத்
திடுமென்றுபின் திகைக்கவிட்டு
(மாறி)