|
5 |
| அறிவுத் துறையதி காரம் - என்றும் | | அழியாமல் நிற்கும்இவ் வுலகென்பார் யாரும் | | அரசுற்ற புல்லதி காரம் - மக்கள் | | அளிக்கின்ற குடவோலை நின்றாலே தீரும் (அதி) |
|
161. தமிழர் ஏமாற்றம் அடைந்தமை |
|
'வானபராபரனே' என்ற மெட்டு |
1 |
| தேவரும் அசுரருமே - சேர்ந்து | | திருப்பாற் கடல்க டைந்தார் | | தீவிய சுரை கண்டதும் - தேவர் | | திடுமென்று கவர்ந்து கொண்டார் | | ஆவலொடுபன் னெடு நாள் உழந்தும் | | அசுரர் அவல முண்டார் (தேவரும்) |
|
2 |
| வடவரும் தென்னவரும் - ஆங்கில | | வல்லரசைக் களைந்தார் | | வடவர்தம் இந்தியையே - ஆளும் | | வன்மொழி யாத்துணிந்தார் | | மடமையை இன்றே தென்னவர் உணர்ந்து | | வண்டமிழ் காத்திடுவீர். (தேவரும்) |
|
162. நேருவின் சொற்பிறழ்வு |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
ப. |
| மாறி விட்டாரே - நேரு சொல் | | மாறி விட்டாரே |
|
து. ப. |
| தேறியுற்ற தென்னகத்தைத் | | திடுமென்றுபின் திகைக்கவிட்டு (மாறி) |
|