|
உ. 1 |
| வேறுபட்ட மொழியா ரெல்லாம் | | வேண்டு மட்டும் ஆங்கிலமாம் | | பேறுபெற்று வாழ்க வெனப் | | பெருந்தனமாய்ப் பன்முறையும் | | கூறுபட்ட சொற்களெல்லாங் | | கொண்டுறுதி கூறியபின் | | ஈறுமட்டும் பதவி தாங்க | | எண்ணியிந்தி யார்மகிழ (மாறி) |
|
2 |
| முழுமதியின் தன்னரசை | | மூதறிஞர் எனத்தொடங்கி | | விழுமதியின் பின்முறையாய் | | வேறுபட்டுக் காருவாப்போல் | | வழுமதியர் மொழிகேட்டு | | வன்மை நடுவின்மையுடன் | | குழுமி நின்ற குடியுரிமை | | குலைத்துநெடுங் கொடுங்கோற்கே (மாறி) |
|
163. வடவர் நம் தலைவரல்லர் |
|
'சமரசம் உலாவும் இடமே' என்ற மெட்டு |
ப. |
| வடவரோடு நாமும் சமமே - எவ் | | வகையிலுந்தான். |
|
உ. 1 |
| முந்தியிங் காங்கிலர் வருவதன் முன்பும் | | பிந்தியும் அவரே நீங்கிய பின்பும் | | இந்தியார் நம்மை ஆள்வதோர் பண்பும் | | இல்லையே சிறிதும் எவ்வகையி லுந்தான் (வடவ) |
|
2 |
| இந்தியின் றாரியம் இன்றமிழ் வேறு | | இரண்டும் ஒன்றாக இசையுமோ கூறு | | இந்தியும் தமிழ்மேல் இறைகொளு மாறு | | இல்லையே இயல்பும் எவ்வகையிலுந்தான் (வடவ) |
|