பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்153

3
இந்தியை எதிர்ப்பதெல்லாம் எதிர்க்கட்சி என்பார் - இனி
எத்தனைநாள் இங்ஙனம் ஏமாற்றுவர் பின்பார் - மிக
எதிர்த்துவரும் பொதுத்தேர்தலில் என்னசெய்குவார் - அடி மண்ணைக் கௌவுவார்.
(இந்தி)
181. அரசியற் கட்சியார் கல்வித்துறையில் தலையிடல்
'சீரகுவர சுகுணாலய' என்ற மெட்டு
பண் - (பைரவி)
தாளம் - முன்னை
ப.
ஆசிரியருக் கறிவில்லையா
அரசியலார் கலைத்துறை தலையிட
(ஆசிரி)
து. ப.
அடாததென்று விடாது சொல்லியும்
வடாதுமொழி யிந்தியே வலுக்கட்டாயம்
(ஆசிரி)
உ. 1
ஆள்வினைப் பாலே அதிகாரத் தாலே
கேள்வியிலை யென்றுசெய் கேடிரு பாலே.
(ஆசிரி)
2
இருமொழிக் கொள்கை ஏற்குமிவ் வெல்கை
இந்தியைப் புகுத்தவே மும்மொழிக் கொள்கை
(ஆசிரி)
3
ஆங்கிலம் நீங்கின் அறிவுபின் வாங்கும்
ஓங்கும் ஒற்றுமையற உரிமை ஏங்கும்
(ஆசிரி)