பக்கம் எண் :

154இசைத்தமிழ்க் கலம்பகம்

.
182. கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்றல்
(இசைந்த பண்ணிற் பாடுக)
தாளம் - முன்னை
1
ஆயிரம் பாட்டிற்கடி அறிந்தும் ஒன்றன் உருவும்
    அறியா திருந்தால்பயன் என்னே என்னே
மாயிரு மொழிகளை மறுவறக் கற்ற லின்றி
     மாணவர்க் கிந்திஎதற் கின்னே இன்னே.
2
கல்வி கரையில்லாமல் கடலினும் விரிந்ததைக்
     கற்பவர் நாள்குறையும் எல்லை எல்லை
செல்வ மெனச்சிறந்த செய்ய கலையிருக்கச்
     சிறுமொழி கற்கநாளும் இல்லை இல்லை.
3
ஆனையைப் போன்றேஒரு பூனையும் விலங்கேனும்
    ஆனையாமோ பூனையும் சொல்லும் சொல்லும்
ஆங்கிலம் போன்றேஇன இந்தியும் மொழியேனும்
     ஆங்கிலமா யெங்ஙனம் செல்லும் செல்லும்.
4
இந்திய ரெல்லாருமே இந்தியப் பொதுமொழி
    இந்தியென் றேற்றுக்கொண்ட துண்டோ உண்டோ
மந்திரி மாரும்அதை முந்தியெண்ணா மல் - இங்கே
     இந்தியைப் புகுத்துதல் நன்றோ நன்றோ.
183. இந்தியா ஒரு நாடன்மை
'சாமி விவேகானந்தா' என்ற மெட்டு வகை
இந்தியா ஒரே நாடென்று
இருந்த காலம் என்று
து. ப.
இங்கிலாந்தின் வலிமை மாட்சி
இருந்ததாலே ஒருமை யாட்சி
(இந்தி)