(இசைந்த பண்ணிற் பாடுக) |
தாளம் - முன்னை |
1 |
| ஆயிரம் பாட்டிற்கடி அறிந்தும் ஒன்றன் உருவும் | | அறியா திருந்தால்பயன் என்னே என்னே | | மாயிரு மொழிகளை மறுவறக் கற்ற லின்றி | | மாணவர்க் கிந்திஎதற் கின்னே இன்னே. |
|
2 |
| கல்வி கரையில்லாமல் கடலினும் விரிந்ததைக் | | கற்பவர் நாள்குறையும் எல்லை எல்லை | | செல்வ மெனச்சிறந்த செய்ய கலையிருக்கச் | | சிறுமொழி கற்கநாளும் இல்லை இல்லை. |
|
3 |
| ஆனையைப் போன்றேஒரு பூனையும் விலங்கேனும் | | ஆனையாமோ பூனையும் சொல்லும் சொல்லும் | | ஆங்கிலம் போன்றேஇன இந்தியும் மொழியேனும் | | ஆங்கிலமா யெங்ஙனம் செல்லும் செல்லும். |
|
4 |
| இந்திய ரெல்லாருமே இந்தியப் பொதுமொழி | | இந்தியென் றேற்றுக்கொண்ட துண்டோ உண்டோ | | மந்திரி மாரும்அதை முந்தியெண்ணா மல் - இங்கே | | இந்தியைப் புகுத்துதல் நன்றோ நன்றோ. |
|
183. இந்தியா ஒரு நாடன்மை |
|
'சாமி விவேகானந்தா' என்ற மெட்டு வகை |
ப |
.
| இந்தியா ஒரே நாடென்று | | இருந்த காலம் என்று |
|
து. ப. |
| இங்கிலாந்தின் வலிமை மாட்சி | | இருந்ததாலே ஒருமை யாட்சி (இந்தி) |
|