|
2 |
| பத்தாயிரம் மேலும் பற்றாருந் தாம்மேவும் | | மெத்த வான்மீகியை மெத்துங் கம்பன்பாவும் (துளசி) |
|
3 |
| சுடரோன் வெங்கதிராலே சொலிக்குந் தண்மதிபோலத் | | தொடர்புங் கம்பன் பாங்கே துளசிதாசன் போங்கும் (துளசி) |
|
4 |
| இராமகதை மூலம் இந்திபுகுத் தெண்ணம் | | இராமல் எந்தக்காலும் இருக்க நல்லவண்ணம். (துளசி) |
|
199. தமிழ்கெடவரும் வளர்ச்சித்திட்டம் பயனற்றது |
|
'தோடுடைய செவியன்' என்ற மெட்டு |
பண் - நாட்டை தாளம் - முன்னை |
1 |
| வாளைதவழ் வெள்ளங்களி வந்தயல் துள்ளி யிளந்தெங்கின் | | பாளைமிசை வாளின்மிளிர் பண்ணை நீர்ப் பாசனங் கண்டாலும் | | காளையிவர் கண்ணுதல்முக் காலைதேர் கழகத் தமிழ்நைய | | நாளைவட இந்தியொடு நாகரி நலியின் ஒருநன்றோ. |
|
2 |
| இரும்பும் இன்று நெய்வேலியில் ஏற்படும் பழுப்பு நிலக்கரியும் | | பரும்பெனக் குவிந்து தொழிற்சாலைகள் பலவும் எழுந்தாலும் | | விரும்பிவிடை யேறிமுனம் வீற்றிருந் தாய்ந்த தமிழ்நைய | | உரும்புபகை இந்தியொடு நாகரி ஊறு செயின்நன்றோ. |
|
3 |
| கீழ்கரை நின்றேகிமலை கீண்டுபல விருப்புப் பாதை | | மேல்கரை நேர்சேர விணையாகிப்பின் மின்னோட்டம் வந்தாலும் | | சேல்விழியாள் கணவன்களன் சேர்ந்தாய்ந்த செந்தமிழே நைய | | மால்வழியும் இந்தியொடு நாகரி மருவின் ஒருநன்றோ |
|