பக்கம் எண் :

168இசைத்தமிழ்க் கலம்பகம்

4
பள்ளியொடு கல்லூரிகள் பாங்காகப் பட்டி தொட்டியெல்லாம்
நள்ளியெதுங் கட்டணமேயின்றி நல்கூர்ந்தாருங் கற்றாலும்
வெள்ளைவிடை யேறிமுனம் வேண்மிக ஆய்ந்த தமிழ்நைய
கள்ளமுறும் இந்தியொடு நாகரி கறுவி வரின்நன்றோ.
5
முதியோரெலாம் இளமைவர மூப்புச் சம்பளமும் பெற்று வாழ்ந்து
பதியாமலே இளைஞரெலாம் பாங்கான பதவிகள் பெற்றாலும்
மதிசூடி முன்மதுரை யமர்மன்றஞ் சேர்ந்தாய்ந்த தமிழ்நைய
புதிதாய்வரும் இந்தியோடு நாகரி புகுமேல் ஒருநன்றோ.
6
நண்ணும் நடுப்பகல் மாணவர் நாட்டுள்ள பள்ளி களிலெல்லாம்
உண்ணும்படி அறுசுவைசேர் உண்டிகள் உதவியே வந்தாலும்
பெண்ணையிடங் கொண்டான்முனம் பேணியே ஆய்ந்த தமிழ்நைய
எண்ணிவரும் இந்தியொடு நாகரி இன்னல் செயின்நன்றோ.
7
புத்தாடை பல புத்தகங்கள் பூத்துகிற் பொக்கணத்தி லிட்டுத்
தத்தளிக்கும் மாணவரெல் லாருக்கும் தந்தையிற் றந்தாலும்
பித்தன்எனும் பெம்மான்முனம் பீடுற ஆய்ந்த தமிழ்நைய
எத்திவரும் இந்தியொடு நாகரி எய்தின் ஒருநன்றோ.
8
ஊர்தோறும் பல் உணவுப்பொருள் உண்மையில் ஏழைகளே வாங்கும்
நேர்மைவிலைக் கடைகள்பல அண்மையில் நிலையா யிருந்தாலும்
நீர்மேவிய சடையன்முனம் நீடியே ஆழ்ந்த தமிழ்நைய
நீர்மையிலா இந்தியொடு நாகரி நெருங்கி வரின்நன்றோ.