1 |
| இந்தியை எதிர்த்துவந்தோம் நீண்டும் | | எத்தியே புகுத்துகின்றார் மீண்டும் | | செந்தமிழைக் காக்கும்படை வேண்டும் | | செம்மையுடன் நின்றுபொர யாண்டும் |
|
2 |
| செந்தமிழ்த்தென் நாட்டிற்கிந்தி ஏனோ | | சென்றநா ளெதிர்ப்பெலாம் வீண்தானோ | | இந்தியாளன் எம்மனோர்க்குங் கோனோ | | இந்த வாழ்வும் இன்பம்நீடு வானோ. |
|
3 |
| ஆரியம் தமிழ்இடை சொற்போரே | | ஆண்டுகள் மூவாயிரம்என் பாரே | | சீரிய தலைபோங் காலம் நேரே | | செந்தமிழ்க்கும் வந்ததுதீர்ப் பீரே. |
|
4 |
| நூற்றில் எண்பதின்மர் கல்வி யில்லார் | | நாட்டின் வரலாறறிய கில்லார் | | வேற்றுமை யில்லாதவாறே எல்லார் | | வீட்டிலும் புகுந்துசொல்க வல்லார். |
|
5 |
| தமிழ் அரத்தம் ஓடுவார்எல் லாரும் | | தண்டிலே முன்னாகவந்து சேரும் | | இமிழ்திரைக் கடல்கடந்து நேரும் | | எங்குமே தமிழ்முழக்கி ஆரும் |
|