|
| தொழிலகம் பொழிலகம் | | தூய தமிழைப் பரப்புவோம் | | இடம் வலம் இடம் வலம் | | இடம் வலம் இடம் வலம் | |
4 |
| தென் குமரிமேல் வடபனி மலைவரை | | சேரவே யோர்மொழி வைத்தாண்ட சேரலாதன் மறவரே | | தெருவிலும் மருவிலும் | | தீந்தமிழ் தனைப் பரப்புவோம் | | இடம் வலம் இடம் வலம் | | இடம் வலம் இடம் வலம் |
|
5 |
| வெள்ளங்கள் எனமிக விரியும் பஞிலமாய் | | வீறு கொண்ட ஏறுகள்போல் வேறுவேறு படைகளும் | | வெல்லுவோம் செல்லு வோம் | | வெண்ணிலவையுங் கொள்ளுவோம் | | இடம் வலம் இடம் வலம் | | இடம் வலம் இடம் வலம் |
|
208. இந்திப் போருக்கு ஏவல் |
|
(இசைந்த மெட்டிற் பாடுக.) |
1 |
| செந்த மிழ்நி லம்பு குந்து சிந்து கின்ற இந்தியை | | இந்த நாள்நெ ருங்கிமுந்தி இங்கு நின்றும் உந்துவீர் | | கொந்த ழல்வி ரிந்த குண்டெ னுந்த டைகள் வந்திடின் | | கந்து போலொ ருங்கு நின்று கன்றி யேவி லங்குவீர் |
|
2 |
| சட்ட மன்றத் தேர்தல் நேரும் சமையம் நாட்டி லெங்கணும் | | பட்டி தொட்டி பாடி குப்பம் பட்டி னங்கள் நகரெலாம் | | சுற்றி வந்து சந்து பொந்து சிற்றில் மாளி கைகளும் | | உற்ற வர்நம் செந்த மிழ்க்கே ஓலை போடச் செய்குவீர் |
|