ப. |
| நல்ல காலந்தமிழை நண்ணி வருவதென | | நான் செவியுற்றேன் நல்ல சொல் சொல் சொல் இன்றே. |
|
து. ப. |
| பல்லவ புரங்கண்ட பாக்கத்து விரிச்சியும் | | பாங்காயொத் திசைத்தது சில் சில் சில் என்றே (நல்ல) |
|
உ.1 |
| நள்ளிர விலேசென்று தில்லை யம்பலத்திலே | | நானிருந்தேன் நெஞ்சமும் நள் நள் நள் என்றே | | தெள்ளிய ஒலியொன்று தேனூறத் திணிந்ததே | | தென்றமிழ் உலகெலாம் தெள் தெள் தெள் என்றே (நல்ல) |
|
2 |
| வைகறையி லேயொரு மெய்யெனக் கனவினில் | | வந்தனள் தமிழ்மகள் வெல் வெல் வெல் என்றே | | வல்லியர் சூழ நின்றோர் வாயில்லா மகளையே | | வரைந்தனர் அணைநின்று செல் செல் செல் என்றே (நல்ல) |
|