|
210. தமிழ் வெற்றிமுரசு |
|
'ரத்ன மகுட ரஞ்சித பூசண' என்ற மெட்டு |
1 |
| வள்ளுவன் யானைமே லேறி வலம் வந்து | | வார்முரசம் இடிபோல முழங்கவே அறை அறை அறை | | தெள்ளுந் தமிழ்க்கொரு தீங்குமில்லை யினித் | | தீர்ந்தது சிறையென் றறை அறை (வள்ளு) |
|
2 |
| நாட்டிலுள் ளதிருக் கோயில்களி லெல்லாம் | | நல்ல தமிழிலே புல்லி வழிபட அறை அறை அறை | | கூட்டுறவாய் ஒன்றுகூடி யெல்லாருமே | | கும்பிட வாருமென் றறை அறை (வள்ளு) |
|
3 |
| மண்ணுல கெங்கணும் மன்னரொடு கூடி | | மாட்சிமை யாய்த்தமிழ் வீற்றிருக்கு மென்றே அறை அறை அறை | | உண்மையான வரலாறே யெந்நாட்டிலும் | | ஓங்கி வளர்கென அறை அறை (வள்ளு) |
|
211. தமிழன் நற்காலத் தொடக்கம் |
|
பண் - புன்னாகவராளி தாளம் - முன்னை |
ப. |
| ஆடுபாம்பே எழுந்தாடு பாம்பே - இனி | | அழியாது தமிழென்றே ஆடுபாம்பே. |
|
உ.1 |
| ஆரியத்தி னாலடைந்த தாழ்வு நீங்கித் - தமிழ் | | அரியணை யுற்ற தென்றே ஆடு பாம்பே | | சீரியநற் செந்தமிழைப் பேசுபவரே - நல்ல | | சிறப்பை யடைவரென்றே ஆடு பாம்பே (ஆடு) |
|