|
2 |
| ஆங்கி லத்திலுள்ள பல அவியல்கள் - இன்று | | ஆகின்றன தமிழிலென் றாடு பாம்பே | | ஈங் குளவருமே இனிச்சிறு காலத்தில் - பல | | இறும்பூது கண்டிடுவர் ஆடு பாம்பே (ஆடு) |
|
3 |
| நச்சுப் பகைமை யெல்லாம் நைந்தொழிந்து - தமிழ் | | நாடொருமை நண்ணுமென்றே ஆடு பாம்பே | | அச்சத்தை அடியோடும் அகற்றி விட்டுத் - தமிழ் | | ஆசிரியர் வாழுவரென் றாடு பாம்பே (ஆடு) |
|
212. தமிழ்க் கொடி |
|
'கொடி பறக்குது கொடி பறக்குது' என்ற மெட்டு |
ப. |
| கயற்கொடியிது கயற்கொடியிது கயற்கொடியிது தானடா | | கயற்கணியொடு கணவன்மகனுங் கைக்கொண்டகொடி காணடா |
|
அ. |
| கீழைத்தீவுக் கணத்தைவென்று கிளருந்தமிழிற் பெயரிட்டுச் | | சாலித்தீவிற் கடலின்அலைகள் சாலவடிம்பை யலம்பவே | | தாளைப்பொறித்துக் கரையிலிட்டுத் தழைக்கும் வணிகத் தூதினால் | | மேலையவனர் தொடர்புகொண்டு மிகுந்த பாண்டிக் கொடியடா. |
|
ப. |
| புலிக்கொடியிது புலிக்கொடியிது புலிக்கொடியிது தானடா | | பொன்மலையடி வாழ்கோமான்கள் புடைபெயர் கொடி காணடா. |
|