|
214. தமிழன் கண்ட கனா |
|
பண் - (மோகனம்) தாளம் - முன்னை |
ப. |
| காணாத கனவொன்று கண்டேன் - களிகொண்டேன் |
|
து. ப. |
| வீணாக இரவெல்லாம் விழித்திருந்த என் கண்ணே | | தேனாருந் துயிலொன்று திளைத்த விடியற் கண்ணே (காணாத) |
|
உ. |
| மேலைத் திசையிற்பல மெல்லியலார் இறந்த | | மேனியொன்றைத் தாயென்று பேணி விரையிற் கொண்டார் | | கீழைத் திசையினின்று கிளர்ந்தொரு கிழத்தியே | | கிளந்த வுறவால் அவள் கேடில்தாயென்று கண்டார் (காணாத) |
|
215. தமிழன் தன் தவறுகண் டிரங்கல் |
|
'என் உயர் தவப்பயன் அம்மையே அப்பா' என்ற மெட்டு |
பண் - (அடாணா) தாளம் - முன்னை |
| தென்மொழி உலகினில் முன்மொழி யன்றோ | | திசையுறு கொடுந்தமி ழான | | திரவிடத் தாய்மொழி செந்தமி ழன்றோ | | தேவரின் ஆரிய மொழிக்கும் | | தெள்ளிய மூலமே தீந்தமி ழன்றோ | | திருத்தனி மொழிதமிழ் என்றே | | தேற்றினர் மறைமலை யடிகளா ரன்றோ | | தமிழைமுன் தாழ்வெனக் கருதித் | | தமிழென்று சொல்லவுந் தயங்கினேன் நாணித் | | தாயைத் தள்ளினேன் அருந்தமிழ்த் தாயைத் தள்ளினேன். |
|