|
220. தமிழத் தமிழ்ப் புலவர் மாநாடே இந்திபற்றி முடிவு செய்யத் தக்கது |
|
'மயங்குகிறாள் ஒரு மாது' என்ற மெட்டு |
ப. |
| தயங்குவதேன் தமிழ்நாடு - நல்ல | | தமிழுக்கும் இந்திக்கும் இடையிலே நீடு |
|
து. ப. |
| தமிழ்ப் புலவர்மா நாடே | | இந்திவந்தால் நன்றோ அன்றோ எனநாடும் (தயங்கு) |
|
உ.1 |
| நீடிய தமிழ்இங்கு நிலையில்லையா | | நெறியில்லையா பகுத்தறி வில்லையா | | நாடெலாம் எதிர்ப்புகண் படவில்லையா | | இந்தி யாலே ஒன்றாய் இன்றே | | இந்தி யாவே நன்றாம் என்றால் பொருளுண்டோ (தயங்கு) |
|
2 |
| நெருப்பையே நெய்யினால் அணைப்பதுண்டோ | | நீரினால் நெருப்பையும் வளர்ப்பதுண்டோ | | பொறுப்பிலாத் தன்னலப் புலிகளேதாம் | | இந்தி யாலே ஒன்றாய் இன்றே | | இந்தியாவே நன்றாம் என்றால் பொருளுண்டோ (தயங்கு) |
|
221. தனித்தமிழ் கற்றல் |
|
'மணற் பாறை மாடு கட்டி' என்ற மெட்டு |
1 |
| மறைமலையார் அடிகள்வழி | | மறத்தமிழப் புலவரிடம் | | முறையாகப் பாடங்கேட்டுச் செல்லமுத்து - நீ | | முயன்றுபயில் தனித்தமிழைச் செல்லமுத்து. |
|