பக்கம் எண் :

186இசைத்தமிழ்க் கலம்பகம்

2
நெடுங்கணக்கு முதலாக
    நேரான வொலிகளுடன்
கொடுந்தமிழுங் கலவாமல் செல்லமுத்து - பயில்
    குமரிநிலத் திருந்தபடி செல்லமுத்து.
3
உரைநடையில் மறைமலையார்
     உயர்கா.சு. வுடன்மகிழ்நன்
வரைநூல்கள் வாங்கிப்படி செல்லமுத்து - அவை
     வழக்கில்வரப் பழக்கம்பண்ணு செல்லமுத்து.
4
செய்யுளிலே மேற்கணக்கும்
     சிலம்புதிருக் கோவையுடன்
பொய்யாத குறளும்படி செல்லமுத்து - அறம்
     பொருந்தியநா லடியும்படி செல்லமுத்து.
5
இலக்கணத்திற் காரிகையும்
    இலங்கியதொல் காப்பியமும்
விளக்கமாகப் பயின்றுதெளி செல்லமுத்து - மிக
    விலக்கிவட கூறுகளைச் செல்லமுத்து.
 
222. தமிழ்ப் புலவரை இருவகையராய்ப் பிரித்தறிக!
(இசைந்த மெட்டிற் பாடுக)
1
மறைமலை யடிகள் வழியர் வேறு
     வையா புரியார் வழியர் வேறு
பிறைநிலைத் தமிழே பெரிதாமாறு
     பேணும் புலவரைப் பிரித்திவ் வாறு.