பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்191

2
தொன்மை முன்மை வளமை தூய்மையே தாய்மைத்
தன்மைத் தமிழ்உலகில் தலையாகும் வாய்மை.
(உண்மை)
3
அடிமைத் தனத்தை முழு விடுதலை யெனவே
அகமகிழ்ந் திருப்பதோர் அறியாமைக் கனவே.
(உண்மை)
229. முழுத் தாய்மொழியன்பரே மொழிப்புலமை பெறமுடிதல்
'தாதாபாய் நவரோசி' என்ற மெட்டு
ப.
தாய்மொழித் தகைமை விழி
து. ப.
தன்னோர்க் கேயன்றி மன்னோர்க் கில்லையே.
(தாய்)
உ.1
வாய்மொழியாய் வழங்குமொழி
       மனத்தெழுந்த மரபுகொளி
ஆய்வினாலே நூலின்வழி
      அறியார்அயலார் மரபினுழி.
(தாய்)
2
இறைமைபெறத் தமிழ்நூ லெல்லாம்
      இலங்கி நுழைந்தாய்ந்த வெல்லை
மறைமலைபோற் சாமிநாதன்
       மரபுச் சொற்புலம் வாய்ந்ததில்லை.
(தாய்)
3
வேற்றவரே தலைமை பூண்டு
      விரவு சென்னை கால்நூற் றாண்டு
சேர்த்த தமிழ்ச் சொற்கள் ஈண்டு
      செயிர்கள் சொல்லின் செல்லும் நீண்டு.
(தாய்)