பக்கம் எண் :

192இசைத்தமிழ்க் கலம்பகம்

229. தாய்மொழிக் கல்வி என்னும் தமிழ்வாயிற் கல்வி
'அன்னையுந் தந்தையுந் தானே' என்ற மெட்டு
ப.
தாய்மொழிக் கல்வியுந் தானே - தமிழ்த்
தூய்மொழி யன்றெனில் தொடங்குவ தேனே.
(தாய்)
து.ப.
வாய்மையில் தமிழன்பு தானோ - தமிழ்
    வல்லவரை விலக்கித் தள்ளுவ தேனோ
தேயநின் றாங்கில நீக்கம் - பின்னே
    திடுமென இந்தியைப் புகுத்தலே நோக்கம்.
(தாய்)
அ.
ஆடு நனைகின்ற தென்றே - ஓநாய்
அழுது கண்ணீர் விடுவ துண்மையோ அன்றே
நாடியே தமிழதன் நன்றே - முன்பு
நயவாத பேர்நயக் கின்றனர் இன்றே
தேடியே உலகெங்குஞ் சென்றே - காணின்
திருந்திய தூய்மொழி தீந்தமிழ் ஒன்றே
கூடிய தூயசொல் கண்டே - பின்பு
கோவையிற் புகுத்துக தூவுளங் கொண்டே.
(தாய்)
231. வண்ணனை மொழியியலின் (Descriptive Linguistics) வழுவியல்
'மாதாட பாரதேனோ' என்ற மெட்டு
பண் - கமாசு
தாளம் - ஈரொற்று
வண்ணனை மொழியியலே - வழிமயலே
உ.1
முன்னமே மொழிமுதல் மூலமுண்மையைக் கண்டார்
இந்நிலை மொழியெலாம் இடுகுறியெனக் கொண்டார்
(வண்ண)