பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்193

2
கண்ணிய பொருளொன்றைக் காணச் செல்வான் முன்னே
கண்ணைக் கட்டிக்கொண்டு கால்தடுமாறல் என்னே
(வண்ண)
3
மொழிநூலின் திறவுகோல் மூழ்கியிருக்குந் தமிழ்
வழிதவறித் திரி வடமொழியிலே அமிழ்
(வண்ண)
4
ஆவின் வருவதெல்லாம் அருந்திடும் பாலாகுமோ
அமெரிக்கர் சொல்வதெல்லாம் அரியமெய்ந் நூலாகுமோ
(வண்ண)
5
ஆரிய வெறியரும் அணையுங் கொண்டான் மாரும்
வேரியல் தெரிவதை விலக்க வழியாய்க் கோரும்
(வண்ண)
6
ஆங்கிலத்தைச் சிறந்த அளவையாக் கொண்டேனவும்
ஆயிரவாண்டுள் எல்லாம் அடியோடு மாறுமென்னும்
(வண்ண)
7
எந்தமொழியும் மாந்தர் இயம்புங் கொச்சையே யென்று
செந்தமிழின் செம்மையைச் சிதைக்க வழியாம் இன்று
(வண்ண)
232. என் அண்ணாமலை பல்கலைக் கழகப் பணி
'புள்ளிக் கலாப மயிற்பாகன்' என்ற மெட்டு
1
அண்ணாமலை பல்கலைக் கழகம் - என்றும்
அருந்தமிழ் காக்கும் என்னும் உலகம் - அங்கே
     ஆரியம் வேரூன்றித் தமிழ்
     சீரழிந்து போனதாரே கண்டார்
                             வெளி விண்டார்.