|
3 |
| திங்கட்குலத் தமிழைத் திங்கள்போல விளக்கும் | | திங்களிதழும் இன்று ஒளதென்மொழிகயே | | தங்கட் கியன்றவரை திங்கட்கா சளிக்கவே | | தங்கக் கட்டிலணையத் தென்மொழியே (தென்) |
|
234. ஆசிரியனே கல்வியமைச்சனாதற்குரியன் |
|
'பழனிமாமலையில் வாழும்' என்ற மெட்டு |
1 |
| ஆசிரியனே கல்வி அமைச்சனும் ஆவான் | | மாசறு கல்விமுறை மற்றையர் மேவார். |
|
2 |
| செல்வமுங் கல்வியுமோ செறிந்தென்றும் நில்லா | | சேரும் வாரியங்களும் செவ்வையாய்க் கொள்ளா. |
|
3 |
| இருண்டநா டுகளில்தான் இரண்டுமே சேரும் | | தெருண்ட நாடுகள்வேறு தேரவே நேரும். |
|
4 |
| ஆசிரியனுக் குண்டோ அமைந்ததோர் வாழ்வே | | மாசிறிய னாகவே மதிப்பவர் ஆள்வார். |
|
5 |
| ஆங்கிலமுந் தமிழும் அமையும்இந் நாடு | | தீங்கென வரும்இந்தி தீர்ந்திட நாடு. |
|
6 |
| ஆங்கிலம் நீங்கிவிடின் அறியாமை ஈண்டும் | | ஆதலால் இருமொழி வாயிலும் வேண்டும். |
|