|
235. இந்திய வரலாற்றைத் தெற்கினின்று தொடங்குதல் |
|
'கனகசபாபதி தரிசனம் ஒருநாள்' என்ற மெட்டு வகை |
ப. |
| இந்திய வரலாற்றை இனிமேல் தெற்கில் தொடங்க | | என்றனன் சுந்தரமே. |
|
து. ப. |
| பிந்திய சீநிவாசன் பிறங்கிராமச்சந்திரன் | | பெருமித மாயதனைப் பேணிவரைந் தனரே (இந்திய) |
|
உ.1 |
| இந்நாளிற் சிலவரே இந்தியவியல் நூலார் | | முன்னேவைத் தாரியத்தைக் | | கண்ணார் நிலவொளியைக் கதிரோன் இரந்தானென்னத் | | தென்னோரைப் பழித்தனர் தெரிகநன் றேயித்தை (இந்திய) |
|
2 |
| தென்பாலி முகத்தமிழ்த் தேமெல்லொலி கிரேக்கத் | | திரிபென்று கூறுவரே | | வன்பாய் முதிர்ந்து மாங்காய் வடியாக மாறலுண்டோ | | முன்பாலைப் பின்பால் வைத்த முட்டாளர் தேறிவரே (இந்திய) |
|
3 |
| இந்திய நாகரிகம் இசைந்த பண்பாட்டுடனே | | முந்திய தமிழரதே | | இந்த நிலையில்அதைப் பிந்து மாரியமெனல் | | தந்தையை மகனெனும் தன்மையில் முடிவதே (இந்திய) |
|
4 |
| தமிழை மறைப்பதினால்தானே விளையுந் தீங்கு | | தமிழொடு போவதில்லை | | இமிழ்கடல் நூலும்வாறும் இன்மொழி மாந்தனூலும் | | அமிழ்ந்தே பெரிதுங்கெடும் அறிஞரும் காணாவெல்லை (இந்திய) |
|