பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்205

246. தமிழ் வரலாறு தமிழரே எழுதுகை
'சந்தமா மயிலொடு' என்ற மெட்டு
1
         சொந்தமா மொழியையே
               சொல்வர லாறின்றேல்
         வந்தெலா மொழியுமே
               வல்வழி மேலென்றாம்.
2
         இந்தமா நாட்டிலே
               ஏதிலர் ஆரியம்
         வந்ததே மாற்றியே
                வானவர் பேரிலே.
3
         தேவரின் மொழியெனத்
               திண்பொழில் ஒன்றில்லை
        வாயதொன் றுளதெனின்
               வண்டமிழ் என்பதே.
4
         முந்துதான் பேதைமை
               மூழ்கினர் தமிழரே
        இன்றுமேன் ஏதைமை
               ஏலவும் தெளியவே
5
         தான்செயா வேலையே
                தவறுபு கெடுவதே
         ஈன்றமிழ் வாறுமே
                எழுதுக தமிழரே.