|
248. தமிழர் என்போரெல்லாம் தமிழராகார் |
|
'கல்லிலே கலைவண்ணங் கண்டான்' என்ற மெட்டு |
ப. |
| தமிழர் என்றிருப்போர் எல்லாரும் - நல்ல | | தமிழன்பரோ நெஞ்சைத் தடவியே பாரும். |
|
து. ப. |
| தமிழர் என்றில்லாத பேரும் - நல்ல | | தமிழுக்குத் தொண்டுசெய்துள்ளாரே தேரும். (தமிழர்) |
|
உ.1 |
| நக்கீரன் திருவாத வூரன் - நல்ல | | நாவல்ல பரிதிமாற் கலைஞன் என் பேரன் | | தக்காங்குத் தமிழதி காரன் - ஆன | | சாமிநாதை யன்பார்ப் பாவாரோ தேரின். (தமிழர்) |
|
2 |
| பாவேந்தன் வீரமா முனிவன் - தமிழ்ப் | | பன்னூல் மொழிபெயர்ப் பாளன்போப் பினியன் | | தாவியாராய் கால்டு வேலும் - நாமே | | தலைமேற் கொள்ளுந் தமிழாளர்எக் காலும். (தமிழர்) |
|
3 |
| கொண்டான் புத்தமித்தி ரன்தான் - தமிழ் | | கொத்திய தேசிகன் சாமிநா தன்காண் | | தண்டா வையாபுரி யென்பான் - இவர் | | தவறிக் கனாவிலும் தமிழர்ஆ கார்தான். (தமிழர்) |
|