|
249. ஒற்றுமையுரம் |
|
'ஆரகிம்பவே' என்ற மெட்டு |
பண் - தோடி தாளம் - ஈரொற்று |
ப. |
| சேர்ந்து வாழ்வதே - (நம்) - சிறந்த வலிமை |
|
து. ப. |
| சிறுகோலும் செறிந்து நின்றிடின் சேர்த்தொடிக்கவே ஏலுமோ. (சேர்ந்து) |
|
உ.1 |
| சேர சோழ பாண்டியர்கள் சேர்ந்துநின்ற கால முழுதும் | | வேறரசர் யாரும் வெல்ல விரற்கிடையும் இயன்ற தில்லை. (சேர்ந்து) |
|
2 |
| மூவரால் தொண்ணூற் றெழுவர் முறியடிப்புண் டாரென் சொல்லை | | ஏவர் நம்புவார் இவ்வுலகில் இதனிலும் வேறிழிவே யில்லை. (சேர்ந்து) |
|
3 |
| பல்குழுவொடு பாழ் செயுட்பகை பைந்தமிழைக் கொல் குறும்பே | | கல்லாமையொடு கொண்டுவந்த கட்டாய இந்தி யிங்கே. (சேர்ந்து) |
|
4 |
| பென்னம்பெரிய தமிழினந்தான் பிறப்பொடு தொடர்புற்ற பல | | சின்னஞ்சிறிய குலங்களாகச் சிதைந்து பழஞ்சீர் கெட்டதே. (சேர்ந்து) |
|