பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்209

250. பிராமணர் தமிழன்பராகித் தமிழ்நாட்டை வழிவழி யாள்க
'இந்து நேச வங்க தேச பந்துவை யிழந்தனம்' என்ற மெட்டு வகை
பண் - சிந்துபைரவி
தாளம் - ஈரொற்று
1
            எந்த வூருஞ் சொந்த வூரே
                 எவரும் உலகில் உறவினர்
             என்ற கொள்கை யினியர் தமிழர்
                ஏற்க வேபி ராமணர்.
2
             வந்த நாட்டின் வழமை கொள்ளல்
                  வந்த வர்தம் கடமையே
             செந்த மிழ்பி ராம ணர்க்கும்
                  சொந்த அன்னை நன்மொழி.
3
            வழக்கில் இல்லா வடமொ ழிக்கு
                 வருமோ தெய்வத் தன்மையே
             வழக்கில் திரிந்த தமிழே பின்னர்
                  மாறி யுள்ள தாரியம்.
4
             வீட்டி லும்பி ராம ணர்தாம்
                 போற்றும் பூசை தமிழிலே
            ஆற்றின் என்றும் ஆளும் வினையே
                  சாற்றில் நூறும் ஏற்கவே.
5
             முந்து நாள்பி ராம ணர்தாம்
                  மொழிந்தார் இருபொய் நாட்டிலே
             இந்த நாளும் ஏமாற் றங்கள்
                 ஏற்கு மோநன் றெண்ணுவீர்.