|
250. பிராமணர் தமிழன்பராகித் தமிழ்நாட்டை வழிவழி யாள்க |
|
'இந்து நேச வங்க தேச பந்துவை யிழந்தனம்' என்ற மெட்டு வகை |
பண் - சிந்துபைரவி தாளம் - ஈரொற்று |
1 |
| எந்த வூருஞ் சொந்த வூரே | | எவரும் உலகில் உறவினர் | | என்ற கொள்கை யினியர் தமிழர் | | ஏற்க வேபி ராமணர். |
|
2 |
| வந்த நாட்டின் வழமை கொள்ளல் | | வந்த வர்தம் கடமையே | | செந்த மிழ்பி ராம ணர்க்கும் | | சொந்த அன்னை நன்மொழி. |
|
3 |
| வழக்கில் இல்லா வடமொ ழிக்கு | | வருமோ தெய்வத் தன்மையே | | வழக்கில் திரிந்த தமிழே பின்னர் | | மாறி யுள்ள தாரியம். |
|
4 |
| வீட்டி லும்பி ராம ணர்தாம் | | போற்றும் பூசை தமிழிலே | | ஆற்றின் என்றும் ஆளும் வினையே | | சாற்றில் நூறும் ஏற்கவே. |
|
5 |
| முந்து நாள்பி ராம ணர்தாம் | | மொழிந்தார் இருபொய் நாட்டிலே | | இந்த நாளும் ஏமாற் றங்கள் | | ஏற்கு மோநன் றெண்ணுவீர். |
|