பக்கம் எண் :

210இசைத்தமிழ்க் கலம்பகம்

251. ஆரியர் தமிழர் ஒற்றுமை
'வள்ளிக் கணவன் பேரை' என்ற மெட்டு
1
ஆரியர் தமிழரே வேறு பாடெதுமின்றி
    ஓரிய லாகவேண்டும் - நல்ல தங்கமே
     ஒருமித்து வாழவேண்டும்.
2
தமிழரும் ஆரியரும் சமநிலை யுணர்வோடு
     தமிழையே தாங்கவேண்டும் - நல்ல தங்கமே
     தமிழகம் ஓங்கவேண்டும்.
3
இந்திய வரலாறு முந்திய நிலைகூறத்
     தென்றிசை சேர வேண்டும் - நல்ல தங்கமே
     திரிதலுந் தீரவேண்டும்.
4
நினைவு வலிமையெல்லா வினைகளுக்குமே யொன்றாய்
     முனையுந் திறமேயன்று - நல்ல தங்கமே
     முதன்மையாய்ப் பிறவுமுண்டு.
5
நலனாக வாழ்வதற்குக் குலவகை தீருமட்டும்
     நிலையிதே நிற்கவேண்டும் - நல்ல தங்கமே
     நேர்மையுங் கற்கவேண்டும்.