|
3 |
| அறுபத்து நால்விளை யாடல்க ளைத்திரு | | அடியவர்க் காய்ச்சிவன் அருளிச்செய் தான்இவண் | | மறுவுற்ற கோல்நிமிர் மாநெடுஞ் செழியனும் | | மன்பெருந் தேவியும் மடிந்தனர் தெரியுமுன் | | மன்பதை இன்பொடு வாழ - அன்புறு நன்னடு நீள | | மகிழ்தரும் உயிரென வந்து - மதிபரசு லகுபுரந்த (மதுரை) |
|
4 |
| தகுந்ததன் றேதமிழ் தானெனக் குயக்கொண்டான் | | தருக்கி நக்கீரனால் தணிந்தனன் பெருமடம் | | மிகுந்த பண்டாரகர் மெ. சுந்தரம் முதல் | | மேதகை யோர்தமிழ் தீதற வுறும்இடம் | | மேனகை யரம்பைநாண - மேனிலம் புரிந்தே காண | | மழலையங் கிளிகுயில் மயிலும் - மழறு முத்தமிழ் முறை யிலும் (மதுரை) |
|
275. மாந்தன் செருக்கடக்கம் |
|
'வனசாட்சி' என்ற மெட்டு |
பண் - இசைந்த பண்ணிற் பாடுக தாளம் - முன்னை |
ப. |
| செருக்கேனோ - சிறுதகை மாந்தனே |
|
உ.1 |
| சுருக்கிய நாளிலும் சோர்பிணி யூறு | | சூழ்கடல் மீனுறும் ஆண்டில்ஐந் நூறு | | பெருக்கம் ஐயாயிரம் பெறும்மரம் தேறு | | பெரியவன் நானென்று பேசல்எவ் வாறு? (செருக்) |
|
2 |
| கோழி புறாவொடு குருவிகள் கிள்ளை | | கொத்தினும் ஊண்கெடல் சற்றுமே இல்லை | | நாளுமே குளிப்பினும் நன்குமூ வெல்லை | | நம்பியும் தொடுவது நலங்கெடும் ஒல்லை (செருக்) |
|