|
3 |
| ஈக்களின் எச்சிலும் இனியசெந் தேனாம் | | எறும்புறும் பதனீரும் ஏற்றது தானாம் | | மாக்களில் நாயும்வாய் மடுத்தது தீனாம் | | மாந்தனின் கைபடின் மறுப்பதும் ஏனாம் (செருக்) |
|
4 |
| ஆவிடு சாணமும் அணிமனை மெழுக்கு | | அதன்சிறு நீருமே அரிவையர் விழுக்கு | | கோவிலில் தெய்வமும் கோவைந்து முழுக்கு | | குலவனின் வியர்வையும் குலவறும் அழுக்கு (செருக்) |
|
5 |
| நன்றியறி வுடைமை நாயில் அமைத்தான் | | நல்லொழுங் கைஅணி செல்லெறும் புய்த்தான் | | கன்றிய மானமும் கவரியில் வைத்தான் | | கரைந்துற வாடலைக் காக்கையில் தைத்தான் (செருக்) |
|
276. பொங்கல் |
|
'திருப்பரங்கிரிவாசா' என்ற மெட்டு |
ப. |
| தமிழனுக் கொருதிருநாள் - பெருந் | | தைப்பொங்கல் என வருநாள். |
|
உ.1 |
| அமுதமும் புதிரியும் அடுகலம் பொங்கும் | | அழகிய கோலங்கள் அறிவொடு தங்கும் | | கமுகமும் வாழையும் கன்னலும் தெங்கும் | | காய்தரு நெல்லொடு காண்வரும் எங்கும் (தமிழனுக்) |
|
2 |
| மங்கையர் கூந்தலில் மலரும்பே ரரும்பு | | மகிழுறு சிறுமகார் வாயெல்லாம் கரும்பு | | பொங்கலிற் பலவகை பொலிந்திடும் பரும்பு | | புலவர்செந் தமிழ்செவிப் புலனுற விரும்பு (தமிழனுக்) |
|