|
3 |
| கண்டகம் நிறைந்திடக் கறவைகள் கறக்கும் | | கண்ணுப்பீ ளைவேம்பு கருதவே சிறக்கும் | | மண்டுறு பசியென வழங்குசொல் மறக்கும் | | மருவுதை பிறந்திடின் வழியது திறக்கும் (தமிழனுக்) |
|
4 |
| முல்லையில் மதமிக முழங்கும்கொல் லேறு | | முதுகுடி மறவரும் முன்னுவர் வீறு | | தொல்லைநல் வழக்கமே துணையுறு பேறு | | தூய தமிழர்விழா துணிந்திது கூறு (தமிழனுக்) |
|
5 |
| இரப்பவர் அரையிலும் இருக்கும்புத் தாடை | | எழிலுறு கணிகையர் ஏறுவர் மேடை | | பரப்பியே வரும்வளி பசுமஞ்சள் வாடை | | பரிந்தெடு நோன்புநூல் படிமையின் சாடை (தமிழனுக்) |
|
277. எறும்பின் ஏற்றம் |
|
'இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்' என்ற மெட்டு |
1 |
| சிற்றுயி ரானநற் சிற்றெறும்பே | | செவியுங்கண் ணும்உனக் கில்லையென்பார் | | கற்றது நீஎந்தக் கல்லூரியில் | | கலைஞரும் நாணியே தலைவணங்க. |
|
2 |
| ஒற்றரை முன்னுற உய்த்தறிந்து | | ஒன்றன்பின் ஒன்றாக ஊர்ந்துசென்று | | உற்ற பொருள்கொள்ள ஒற்றுமையாய் | | ஓத்துழைக் கும்மிக உன்இனமே. |
|
3 |
| மாரிநாட்கு முன்னே சேர்த்துவைத்து | | மற்றதை அன்றன்று வாய்மடுத்து | | பேரும் பெரும்பொருள் சேரத்தள்ளும் | | பெருந்திறல் உன்இனம் பெற்றுள்ளதே. |
|