பக்கம் எண் :

230இசைத்தமிழ்க் கலம்பகம்

4
செல்லும் வரிசையைச் சிதைத்து விட்டால்
    சிறிதுநே ரத்திலே சேர்ந்துகொண்டு
நல்ல படியாக நாயகன்சொல்
     நாடிக் கடைப்பிடித் தோடிவிடும்.
5
ஏனை வளைகளில் வாழ்கின்றவும்
     ஏனை யெறும்பினம் ஆனவையும்
தானான நேர்ச்சியாய்ச் சார்ந்திடினும்
     சண்டை பெரும்பாலும் இன்றிச்செல்லும்.
6
சோம்பி யிராதென்றும் சுற்றிவந்து
     சுறுசுறுப் பாகத்தம் கடமைசெய்து
தேம்பாகும் கூடிய வேறெறும்பும்
     தின்ன அன்புகொள்ளும் உன்இனமே.
7
எறும்பு வீழ்ந்தபொருள் ஏற்றே யுண்டால்
     எய்துவர் கூரிய பார்வை யென்பார்
இறும்பூதாம் உன்அகக் கண்வலிமை
     எய்துவர் என்பதோ உட்கருத்தே.
8
உயிரினத் துள்மாந்தன் உயர்ந்தவனாம்
     ஒருசிலர் மாந்தருள் உயர்ந்தவராம்
அயர்ந்துமதம் அறிவியல் ஆற்றலினால்
     அணுவுந் தீங்கில்லாமை அறிவுரைப்பாய்.
277. கும்மிப் பாட்டு
'அன்புடைய தோழியரே' என்ற மெட்டு
பண் - காப்பி
தாளம் - முன்னை
ப.
கும்மியடிப் போம்நாம் இன்றே கூடிவாரும்
கும்மாள மாகவே எல்லீரும்.
(கும்மி)