|
4 |
| செல்லும் வரிசையைச் சிதைத்து விட்டால் | | சிறிதுநே ரத்திலே சேர்ந்துகொண்டு | | நல்ல படியாக நாயகன்சொல் | | நாடிக் கடைப்பிடித் தோடிவிடும். |
|
5 |
| ஏனை வளைகளில் வாழ்கின்றவும் | | ஏனை யெறும்பினம் ஆனவையும் | | தானான நேர்ச்சியாய்ச் சார்ந்திடினும் | | சண்டை பெரும்பாலும் இன்றிச்செல்லும். |
|
6 |
| சோம்பி யிராதென்றும் சுற்றிவந்து | | சுறுசுறுப் பாகத்தம் கடமைசெய்து | | தேம்பாகும் கூடிய வேறெறும்பும் | | தின்ன அன்புகொள்ளும் உன்இனமே. |
|
7 |
| எறும்பு வீழ்ந்தபொருள் ஏற்றே யுண்டால் | | எய்துவர் கூரிய பார்வை யென்பார் | | இறும்பூதாம் உன்அகக் கண்வலிமை | | எய்துவர் என்பதோ உட்கருத்தே. |
|
8 |
| உயிரினத் துள்மாந்தன் உயர்ந்தவனாம் | | ஒருசிலர் மாந்தருள் உயர்ந்தவராம் | | அயர்ந்துமதம் அறிவியல் ஆற்றலினால் | | அணுவுந் தீங்கில்லாமை அறிவுரைப்பாய். |
|
277. கும்மிப் பாட்டு |
|
'அன்புடைய தோழியரே' என்ற மெட்டு |
பண் - காப்பி தாளம் - முன்னை |
ப. |
| கும்மியடிப் போம்நாம் இன்றே கூடிவாரும் | | கும்மாள மாகவே எல்லீரும். (கும்மி) |
|