|
உ.1 |
| வட்டமாய் நின்றுபின்னே வலமாகச் சுற்றிவந்து | | கொட்டிக் கைகள் இடைக்குறுக்கே வைப்போம். (கும்மி) |
|
2 |
| ஆடிவரும் மயில்போல் அழகாய் அடியெடுத்துப் | | பாடிக் கொண்டின்பமாய்ப் பலமுறையும். (கும்மி) |
|
3 |
| தேனார் மணங்கமழும் தென்றல் நுகர்ந்துகொண்டு | | மானேர் விழிகளும் மகிழ்கூட. (கும்மி) |
|
4 |
| உள்ளம் ஒடுங்கிநிற்க ஒருபெருங் கடவுளைக் | | கள்ள மில்லாமலே கைதொழுவோம் (கும்மி) |
|
5 |
| தாயுந்தந்தை யரசும் தனிமொழி யானதமிழ்த் | | தாயுந் தழைக்கவே நீடூழி. (கும்மி) |
|
279. கோலாட்டப் பாட்டு |
|
'ராரவேணுகோஒ பாலா' என்ற தாளவிசை மெட்டு |
பண் - பிலகரி தாளம் - முன்னை |
|
ப. |
| ஆடுவோம் கோலாட்டம்வாரும் ஆடகர் அனைவரும் புகழ்ந்திடவே |
|
து. ப.1 |
| கூடிவண்ணக் கோலெடுத்துக் கோலமாக நின்றியங்கிப் | | பாடி யின்பமாய் இணைதேடியே சென்று வழி | | மீளவந்து வலமிடம் நெடுகப் பலமுறைதிருமி நலவொலி யடிகொள. (ஆடு) |
|