பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்231

உ.1
வட்டமாய் நின்றுபின்னே வலமாகச் சுற்றிவந்து
கொட்டிக் கைகள் இடைக்குறுக்கே வைப்போம்.
(கும்மி)
2
ஆடிவரும் மயில்போல் அழகாய் அடியெடுத்துப்
பாடிக் கொண்டின்பமாய்ப் பலமுறையும்.
(கும்மி)
3
தேனார் மணங்கமழும் தென்றல் நுகர்ந்துகொண்டு
மானேர் விழிகளும் மகிழ்கூட.
(கும்மி)
4
உள்ளம் ஒடுங்கிநிற்க ஒருபெருங் கடவுளைக்
கள்ள மில்லாமலே கைதொழுவோம்
(கும்மி)
5
தாயுந்தந்தை யரசும் தனிமொழி யானதமிழ்த்
தாயுந் தழைக்கவே நீடூழி. (கும்மி)
279. கோலாட்டப் பாட்டு
'ராரவேணுகோஒ பாலா' என்ற தாளவிசை மெட்டு
பண் - பிலகரி
தாளம் - முன்னை
ப.
ஆடுவோம் கோலாட்டம்வாரும் ஆடகர் அனைவரும் புகழ்ந்திடவே
து. ப.1
கூடிவண்ணக் கோலெடுத்துக் கோலமாக நின்றியங்கிப்
பாடி யின்பமாய் இணைதேடியே சென்று வழி
மீளவந்து வலமிடம் நெடுகப் பலமுறைதிருமி நலவொலி யடிகொள.
(ஆடு)