பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்233

281. உழவன் உயர்வு
'சயசயகோ குலபால' என்ற மெட்டு
பண் - பைரவி
தாளம் - ஈரொற்று
ப.
உழவன் எங்கும் உயர்ந்தோனே
உலகருத்தும் உணவோனே
தளராதே உழைப்போனே
தனியுரிமை உடையோனே.
உ.1
விருந்தோம்பும் வேளாண்மை வியனுலகில் மரபாகும்
மருந்தாகி நடுவூருள் மருவும்நல்ல மரமாகும்
(உழவன்)
2
ஐம்புலத்தும் இல்வாழ்வார் அனைவருக்கும் அளித்துதவி
ஐந்நிலத்தும் பொருள்மாற்றே ஆற்றும் கூட்டுறவாளி
(உழவன்)
3
அந்தணரின் அருந்துறவும் அரசினரின் ஆள்வினையும்
வந்தபொருள் வாணிகமும் வளர்அறிவும் தான்வனையும்
(உழவன்)
282. மக்கள்தொகை மிகையால் தொல்லை
பண் - காப்பி தாளம் - முன்னை
ப.
இனிநல்ல காலமே இல்லை - மக்கள்
இனப்பெருக் கால்மிக எய்துவர் தொல்லை
உ.1
கனிதருஞ் சோலையும் கழனியும் ஒல்லை
    கரந்து நகர்விரிவு காணுவ இல்லை
இனிதெனப் பாலையுந் திருந்திய எல்லை
     இடம்பல வுணவுகள் விளைவதற் கில்லை
(இனி)