|
உ |
| திங்களின் வழியெனும் தென்னவன் சார்ந்த | | தீந்தமிழ் உலகினில் தெருவெலாம் முழங்க | | வங்கநற் கலமென வாழ்வினில் நீந்த | | வள்ளுவன் பொதுமறை வழிவழி வழங்க (மங்கலம்) |
|
284. தமிழ் வாழ்த்து |
|
பண் - (காப்பி) தாளம் - ஒற்றை |
ப. |
| வாழிய வேங்கடந் தென்குமரி | | வைகிய ஆயிடைச் செந்தமிழே |
|
உ. |
| வீழிய தீங்கான வேற்றுச்சொல் யாவுமே | | விண்ணோன் வழிபாடு தென்மொழி மேவுமே | | வேறுபல் நூல்தமிழ் வீறுகவே | | ஏழிசை நாடகம் எல்லாம் தமிழ்ஆக | | இன்புறு முத்தமிழ் முன்போல் வழக்காக | | இந்தியும் செல்லுக வந்தவழி. |
|
285. தமிழர் வாழ்த்து |
|
பண் - கலியாணி தாளம் - முன்னை |
ப. |
| செந்தமிழ் மக்கள் எங்கும் சீராய் நீடு வாழிய. |
|
து. ப. |
| முந்துபண்பாடு கண்ட முத்தமிழோர் வாழிய (செந்) |
|
உ. |
| எந்தவூருஞ் சொந்தவூர் எல்லாரும் நல்லினம் | | ஏத்தும் கடவுள்ஒன்றே என்னும் நல்லோர்வாழிய (செந்) |
|