|
உ.1 |
| பரவெளி சுற்றிப் பறந்து | | படுகுழிச் சுரங்கப் பணிசெய் தாலும் | | இரவினில் கருங்கடல் தனித்திருந் தாலும் | | ஏதமில் லாமலே வாழ்க! (வாழ்க) |
|
2 |
| மொழிவெறி குலவெறி மதவெறி யெல்லாம் | | முற்றிய நாட்டு வெறியுடன் நீங்கி | | வழிபடு கடவுள் ஒன்றே யென்றதை | | வணங்கியே யாவரும் வாழ்க! (வாழ்க) |
|
3 |
| பசிபிணி பகையே பறந்திட வேண்டும் | | பாரெலாம் ஓரர சாகவே வேண்டும் | | பாழ்வெடிப் பயிற்சி நீங்கவே வேண்டும் | | பண்புடன் அமைதியும் வாழ்க! (வாழ்க) |
|
290. பண்டைத் தமிழுணர்ச்சி |
|
(இசைந்த மெட்டிற் பாடுக.)ப. | | தமிழுணர்ச்சி யாலே எல்லாம் | | தாங்கினமுன் தமிழ்ப் பெயரே | | அமரர் சூழ்ச்சியாலே பின்னே | | அயற் பொருளெல்லாம் பிற பெயரே. |
| (உரைப்பாட்டு) | கரும்பு மிளகாய் உருளைக்கிழங்கு நீலக் | | கடலை புகையிலை முந்திரிசெந் தாழை | | கதலிச்சி அண்டிமா இதள் கிள்ளை | | விரும்பு குதிரை நெடுங்கழுத்தல் வான்கோழி | | விரையும் புகைவண்டி மிதிவண்டி முதலியன | | வேற்றுப் பொருட்பேர் தமிழ்ச்சொல்லே |
| செந்தாழை - அன்னாச்சி. கதலிச்சி - கர்ப்பூரம் அண்டிமா - மரமுந்திரி. இதள் - பாதரசம். கிள்ளை - சாதிபத்திரி. நெடுகழுத்தல் - ஒட்டகம் | | | | |