|
291. செந்தமிழ் அரண் அதன் செம்மையே |
|
பண் - பூரிகலியாணி தாளம் - முன்னை |
ப. |
| செந்தமிழைக் காத்தது செம்மையென்னும் வரம்பே |
|
து. ப. |
| முந்தே பாண்டியரும் மூடநம்பிக் கையால் | | பிந்திய காலம் பேணாது விட்டபின்பே (செந்) |
|
உ. |
| தந்தைதாய் மனையொடு தம்மை விற்குங் கயவர் | | தமிழ்ப்பெரும் பதவிகள் தாங்கி யுள்ளனர் இன்றே | | இந்தநாள் கலவையாய் இயங்கும் மொழியே தமிழ் | | என்றதன் அரணை எறிவர் பண்டைய தென்றே (செந்) |
|
292. தமிழின் செம்மையும் தூய்மையும் |
|
'என் உயிர் தவப்பயன் அம்மையே அப்பா' என்ற மெட்டு |
உரைப்பாட்டு |
| செந்தமிழ்ச் சிறப்பியல் செம்மைசேர் தூய்மை | | சீரியவுலக மொழிகளுள் | | முந்திய தமிழுயிர் செம்மைசேர் தூய்மை | | முக்கழ கங்களால் மும்மை | | நந்திய தென்றமிழ்ச் செம்மைசேர் தூய்மை | | நாகர மொழியால் நைந்தே | | வந்துள திந்தியால் உள்ளதும் நீங்கின் | | வையகமே தமிழ் இல்லை. |
|
ப. |
| எந்து செய்தாயினும் இன்னுயிர்த் தமிழை | | இன்னே காப்பேன்நான் என்மொழியை இன்னே காப்பேன் நான். |
|