|
293. தமிழைக் கெடுக்கும் இருமொழிகள் |
|
'சாலையிலே இரண்டுமரம்' என்ற மெட்டு வகை |
ப. |
| இந்தியாவில் இரண்டு மொழி எந்தமிழைக் கொல்லும் மொழி | | முந்தி வந்த வடமொழியோ டின்று வரும் இந்தி மொழி. |
|
உ. 1 |
| செந்தமிழில் வழிபடுக சிவன் திருமால் தமிழ்த் தெய்வம் | | செயற்கையான வடமொழியே சென்றுவிட வழிசெய்வம் (இந்தியா) |
|
2 |
| இந்தியார்க்கு நாமடிமை யென்றுவரும் இந்தி யின்றே | | விந்தியத்தின் வடமருங்கே விரைந்து சேர உந்து நன்றே. (இந்தியா) |
|
3 |
| ஆரியத்துள் செந்தமிழ்க்கே அண்ணியதும் ஆங்கிலமே | | சீரியநல் லறிவுபெற்றுச் செழித்ததனால் ஓங்குவமே. (இந்தியா) |
|
294. இந்தியெதிர்ப்பார் எதிர்க்கட்சியார் என்னும் பேதைமை |
|
பண் - காம்போதி தாளம் - முன்னை |
ப. |
| என்ன பேதைமை! இந்தியை எதிர்ப்பார் | | எதிர்க்கட்சி யென்கை. |
|
து. ப. |
| கண்ணை மூடிக்கொண்டே காரிருளே யெல்லாம் | | என்னும் பூனையெண்ணம் இதைவிட நன்கே. (என்ன) |
|
உ.1 |
| முன்னே மறைமலையார் முதலாய் இந்தியை | | முத்தமிழ் முனைவர் முனைந்தே யெதிர்த்தார். | | இன்னே புலவோரை இந்தியை எதிர்த்தால் | | ஏற்றவேலை நீங்கும் என்றே எச்சரித்தார் (என்ன) |
|