பக்கம் எண் :

242இசைத்தமிழ்க் கலம்பகம்

2
தலைமைப் பதவி தாங்கும் தமிழ்ப்புலவர்
     தமிழை முன் காத்தல் தலையாய கடமை
இலையெம் பணியே யிந்தியை யெதிர்த்தல்
     இது தி.மு.க. வே எனவுண்டோ இடமே
(என்ன)
295. மதுரை அறுவாட் படுகொலை
பண் - புன்னாகவராளி
தாளம் - முன்னை
ப.
இது காந்தியமா? படு காலியமா?
உ.1
கயற்கண்ணி யாண்ட மதுரையிலே
கயற்கொடி பறந்த மறுகினிலே
குயக்கொண்டான் சாகப் பகல்வலிமைக்
குலத்தமிழ்க் கீரன் நகரினிலே
(இது)
2
பாண்டியன் பைந்தமிழ்ப் பாடல்களே
ஈண்டிய மாடக் கூடலிலே
மூண்டிரு சமயப் போர்முனையில்
முழுதும் தமிழ்வெல் லூர்தனிலே
(இது)
3
பேரா யத்தின் அலுவலகம்
பெருந்தமிழ்ப் பற்றைக் கொலுங்கழகம்
தூராய்க் கொள்ளும் நெறிமுறையாம்
துன்புறுத் தாமை கடுஞ்சிறையாம்
(இது)
4
அமைதியாய்ச் சென்ற மாணவரை
அறுவாள் வெட்டே ஆனவரை
இமையவ ருங்கண் இமைத்தபுரை
இறவாப் பழியுல கிறுதிவரை.
(இது)