|
296. தொண்டர்படைப் பணி |
|
(இசைந்த மெட்டிற் பாடுக) |
'நட்ட கல்லைத் தெய்வ மென்று' என்னும் செய்யுளோசை. |
1 |
| தொண்டர் கள்தி ரண்டு சென்று கண்ட வூரை யண்டுவீர் | | தண்ட மிழ்த்தி றங்கள் நன்று விண்டு ரைகள் செய்குவீர் | | இந்தி யிங்கு வந்த பின்னே என்ன தீங்கு நேர்ந்திடும் | | என்று மக்கள் கண்டு கொள்ள நன்றெ டுத்துக் கூறுவீர். |
|
2 |
| நூற்று மேனி எண்ப தாகு மாக்க ளின்று தாமெதும் | | ஏட்டை யேபா ராது கையை நாட்டு கின்றோ ராதலால் | | கூட்டி நல்ல கொள்கை யென்று கேட்கு மாறு கூறுவர் | | வேற்ற வர்தம் இந்தி செய்யும் கேட்டை நன்று காணவே. |
|
3 |
| பட்டி னங்கள் மாநகர்கள் பாக்கம் எங்கும் செல்லுவீர் | | விட்டி ருக்கும் விடுமுறைகள் வேண்டு நன்மை கொள்ளுவீர் | | பட்டி தொட்டி யெங்கும் சென்று பற்ப லர்க்குஞ் சொல்லுவீர் | | பட்ட தொல்லை பற்றி யூக்கம் விட்டி டாது தெள்ளுவீர். |
|
298. தீக்குளித்த வேறு நால்வர் |
|
பண் - நாதநாமக்கிரியை தாளம் - முன்னை |
|
ப |
| தீக்குளித்தே யிறந்தார் - நால்வரும் பின் |
|
து. ப. 1 |
| தீக்கெம தூனுடல் தீந்தமிழ்க் கின்னுயிர் | | ஆக்கினம் எனச்சிவ லிங்கம் அரங்கநாதன் (தீக்) |
|