பக்கம் எண் :

ஞா. தேவநேயப் பாவாணர்245

2
ஐயம்பா ளையத்தலை ஆசறும் வீரப்பன்
வையகம் தமிழ்கெட வாழ்வதை வெறுத்துப்பின்
(தீக்)
3
சத்திய மங்கலம் சார்ந்த தமிழ்உழவர்
முத்தெனும் பெயரிய முத்துறழும் மழவர்
(தீக்)
சுற்றமும் நண்பரும் சூழ்தமிழ் வாணரும்
எற்றென இரங்கியே என்றென்றும் அலறவும்
சற்றுமே இரக்கமும் சார்புமில் விலங்கினர்
பித்தமோ வறுமையோ பிணியோ என்றுளறவும்
(தீக்)
299. தீக்குளித்தல் ஆண்மை யன்று
பண் - பந்துவராளி
தாளம் - முன்னை
ப.
தீக்குளிக் காதீர் தீந்தமிழ்த் திறமே
தீழ்ப்புறும் அதனால் தென்றமிழ் மறமே
து. ப.
தாக்கிய இந்தி தகர்ந்துபோம் புறமே
தம்பிரான் அருளால் தமிழ்வெற்றி பெறுமே
(தீக்)
உ.1
வீணாக எரியிலே வெந்துநீர் சாவதால்
விரும்பிய பயனின்றி விளைவது நோவதே
மாணாக வெல்வழி மறத்துறை போவதே
மதிதகு புகழ்தரும் மகிழுவர் தேவரும்
(தீக்)