| 
300. புத்திரசிகாமணி  | 
 | 
| பண் - வசந்தா  தாளம் - முன்னை  | 
ப.  | 
 | புத்திர சிகாமணி புரிந்தது மாபணி. |  
  | 
து. ப.  | 
 | சித்திர வாகையணி செயஅவற் கேயினி  (புத்திர)  |  
  | 
உ.  | 
 | முத்தமிழைக் காக்கவே முனைந்தவூர் காவலன் |   | முதலமைச் சின்மிஞ்சும் முதுகுடி மாவலன் |   | இத்தரையில் இந்தியே ஒழிகெனும் நாவலன் |   | இதைவலி யுறுத்தியே இருகுண்டும் ஏவலன். |  
  | 
301. இற்றைத் தமிழன் இழிநிலை  | 
 | 
'எம்டன் போட்ட குண்டு' என்ற மெட்டு  | 
ப.  | 
 | தமிழைச் சுட்டுக் கொல்ல - ஓ |   | தமிழன் கெட்டான் சொல்ல   |  
  | 
உ.1  | 
 | ஊர்காவல் துறையில்தான் ஊழியம் செய்தாலும் |   | சீராளன் தாய்மொழியைச் சிதையானே ஒருகாலும்  (தமிழைச்)  |  
  | 
2  | 
 | தாயையுங் கொன்றொருவன் தாமரைப் பொன்பெறினும் |   | மாயாமல் இந்நிலத்தே மருவும்நிலை தான்வருமோ  (தமிழைச்)  |  
  | 
3  | 
 | ஒழுங்கமைதி காப்பதன்றோ ஊர்காவற் கடமை யெல்லாம் |   | ஒழுங்கின்றி முதல்வரையும் உட்புகுந்தே அடித்த தென்னே  (தமிழைச்)  |  
  | 
4  | 
 | மாணவரே இந்நிலையில் மாண்பான தமிழ்மறவர் |   | நாணமின்றி அவரையின்று நாகரெனக் கொலைபுரிவர்  (தமிழைச்)  |  
  |