|
300. புத்திரசிகாமணி |
|
பண் - வசந்தா தாளம் - முன்னை |
ப. |
| புத்திர சிகாமணி புரிந்தது மாபணி. |
|
து. ப. |
| சித்திர வாகையணி செயஅவற் கேயினி (புத்திர) |
|
உ. |
| முத்தமிழைக் காக்கவே முனைந்தவூர் காவலன் | | முதலமைச் சின்மிஞ்சும் முதுகுடி மாவலன் | | இத்தரையில் இந்தியே ஒழிகெனும் நாவலன் | | இதைவலி யுறுத்தியே இருகுண்டும் ஏவலன். |
|
301. இற்றைத் தமிழன் இழிநிலை |
|
'எம்டன் போட்ட குண்டு' என்ற மெட்டு |
ப. |
| தமிழைச் சுட்டுக் கொல்ல - ஓ | | தமிழன் கெட்டான் சொல்ல |
|
உ.1 |
| ஊர்காவல் துறையில்தான் ஊழியம் செய்தாலும் | | சீராளன் தாய்மொழியைச் சிதையானே ஒருகாலும் (தமிழைச்) |
|
2 |
| தாயையுங் கொன்றொருவன் தாமரைப் பொன்பெறினும் | | மாயாமல் இந்நிலத்தே மருவும்நிலை தான்வருமோ (தமிழைச்) |
|
3 |
| ஒழுங்கமைதி காப்பதன்றோ ஊர்காவற் கடமை யெல்லாம் | | ஒழுங்கின்றி முதல்வரையும் உட்புகுந்தே அடித்த தென்னே (தமிழைச்) |
|
4 |
| மாணவரே இந்நிலையில் மாண்பான தமிழ்மறவர் | | நாணமின்றி அவரையின்று நாகரெனக் கொலைபுரிவர் (தமிழைச்) |
|