|
8. பழந்தமிழன் சிறப்பு |
|
'ரகுபதி ராகவ ராசாராம்' என்ற மெட்டு |
1 |
| தமிழா உன்றன் முன்னவரே தலையாய் வாழ்ந்த தென்னவனே | | அமிழ்தாம் மாரி அன்னவனே அழகாய் முதனூல் சொன்னவனே. |
|
2 |
| பஃறுளி நாட்டிற் பிறந்தவனாம் பகுத்தறி பண்பிற் சிறந்தவனாம் | | பகையாம் மலையை உறந்தவனாம் பாலும் புலியிற் கறந்தவனாம.்் (தமிழா) |
|
3 |
| யாழுங் குழலும் வடித்தவனாம் யாணர் நடமும் நடித்தவனாம் | | ஏழை நிலையை மடித்தவனாம் இறைவன் கழலைப் பிடித்தவனாம.் (தமிழா) |
|
4 |
| கலத்திற் கிழக்கே சென்றவனாம் கடுகிச் சாலியைக் கொண்டவனாம் | | கரையில் அடியைக் கண்டவனாம் கடலை முழுதும் வென்றவனாம். (தமிழா) |
|
5 |
| தூங்கெயில் மூன்றும் எடுத்தவனாம் துன்ப மழையைத் தடுத்தவனாம் | | ஓங்கெயிற் பொறிகள் தொடுத்தவனாம் உயர்வான் கோபுரம்அடுத்தவனாம். (தமிழா) |
|
6 |
| காந்தக் கோட்டை கட்டினனாம் கடல்போல் ஏரி வெட்டினனாம் | | கங்கை வடக்கும் எட்டினனாம் கயலைப் பனிமலை நட்டினனாம். (தமிழா) |
|
7 |
| நாளுங் கோளுங் கற்றவனாம் நாவல் முற்றும் உற்றவனாம் | | ஏழு நிலத்தும் விற்றவனாம் எல்லை யில்பொருள் பெற்றவனாம். (தமிழா) |
|
8 |
| அறுவை முதலில் நெய்தானாம் அறுசுவை யுண்டி நெய்தானாம். | | அறுவகைச் செய்யுள் செய்தானாம் ஆயிர விளைநன் செய்தானாம். (தமிழா) |
|
9 |
| நானில மெங்கும் தென்னாடு நல்கிய தேயகக் கண்ணோடு | | நாகரி கம்நற்பண்பாடு நாள்தொறும் நன்றாய்ப் பண்பாடு். (தமிழா) |
|