பக்கம் எண் :

8இசைத்தமிழ்க் கலம்பகம்

9. இதுவும் அது (தமிழ நாகரிக முன்மை)
‘கப்பற்பாட்டு’ மெட்டு அல்லது வேறிசைந்த மெட்டு
1
மாந்தனெனக் குமரிமலை மருவியவன் தமிழனே
மாண்புடைய நாகரிகம் மலர்ந்தவனும் தமிழனே!
2
மொழிவளர்ச்சி முதன்முதலாய் முற்றியவன் தமிழனே
மோனையுடன் சிறந்தசெய்யுள் பேசியவன் தமிழனே!
3
பகுத்தறிவே மானமுடன் படைத்தவனும் தமிழனே
பகுத்தறிவால் திணைவகுத்த பண்புடையான் தமிழனே!
4
பலகலையும் பலநூலும் பயிற்றியவன் தமிழனே
பலபொறியும் மதிலரணிற் பதித்தவனும் தமிழனே!
5
அரசியலை முதன்முதலாய் அமைத்தவனும் தமிழனே
அறம்வளர நடுநிலையாய் ஆண்டவனும் தமிழனே!
6
அரிசியினாற் சோறுமுதல் ஆக்கியவன் தமிழனே
அறுசுவையாய் உண்டிகளை அருந்தியவன் தமிழனே!
7
பனிமலையை முதன்முதற்கைப் பற்றியவன் தமிழனே
பலமுறைமீன் புலிவில்அதிற் பதித்தவனும் தமிழனே!
8
கடல்நடுவே கலஞ்செலுத்திக் கரைகண்டவன் தமிழனே
கலப்படையால் குணத்தீவும் காவல்பூண்டான் தமிழனே!
9
வடிவேலால் எறிகடலை வணக்கியவன் தமிழனே
வடிம்பலம்ப நின்றபெரு வழுதியொரு தமிழனே!