பக்கம் எண் :

116செந்தமிழ்க் காஞ்சி

4 க

4
காபிரியேல் மரியாளை வாழ்த்தல்

லூக்கா 1 : 28 - 33

'பழனி மாமலை வாழும்' என்ற மெட்டு

                இராகம் - காப்பி         தாளம் - ஒற்றை

   1. கிருபை பெற்ற மரியே கிளர்ந்துநீ வாழ
  பரமன் நித்த முனக்குப் பலந்தரு தோழன்
   
   2. அரிவை யருக்குள் நீயே அடைந்தனை ஆசி
  அஞ்சாதே தேவதிரு அருட்சக வாசி
   
   3. கருப்பவதி யாயொரு கலைஞனைப் பெறுவாய்
  பெருக்கமுடன் ஏசென்னும் பேரது தருவாய்.
   
   4. மாபரமனுக்கவர் மகனெனப் படுவார்
  தாவீதின் அரியணை தனயனா யடைவார்.
   
   5. இசுரவேல் குடும்பத்தை என்றென்றும் ஆளும்
  இறுதியவ் வரசிற்கே இலையொரு நாளும்.

5
கிறித்துவின் பிறப்பு

இராகம் - பியாக்                             தாளம் - முன்னை

ப.

 
   
   இத்தரையின் மத்தியினில் பெத்தலையில் சத்திரம்  
   

து. ப.

 
   
   அத்தனேக புத்திரன் கிறித்துவு முதித்தனர்

(இத்)

   

உ.

 
   
   கர்த்தரின் தூதன் நற்செய்திப் போதம்  
   செய்த்தலைசென்று சொல்ல மைத்தவர் கண்டுகொள்ள

(இத்)

   
   உன்னதம் மானம் மண்சமா தானம்  
   மன்பதை மேற்பிரியம் மன்னற்காக விண்பாட

(இத்)

   
   மீனு1 றக் கீழார் வானநன் னூலார்  
   மின்னொளிர் பொன்னே தூபம் வெள்ளைப் போள மிறுக்க

(இத்)

1. மீன் - நட்சத்திரம்