பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 117

6 ஏசுவ

6
ஏசுவின் ஏழைக்கோலம்

‘வெடலனு கோதண்டபாணி‘ என்ற மெட்டு

            தோடி ரூபகம்

ப.

 
   
   ஏசையா இதென்ன கோலம்  
   ஏழையோநீ இந்திர சாலம்  
   

து. ப.

 
   
   மேசையா மீன்மிளிர ஞாலம்  
   மேலை வானுனை மீச்சொல் காலும்

(ஏசையா)

   

உ.

 
   
   காசினிதீ குளிருங் காலம்  
   கன்னியேழை மரியாள் மூலம்  
   காலி சேரயர் காவடித் தோழம்  
   கண்டதில்லை இடம்வி சாலம்

(ஏசையா)

   
   தூசுபழங் கந்தை மேலும்  
   துய்ய பஞ்சணை புல்லே கீழும்  
   தொழுவர்1 முனமுன் தூதராலும்  
   தோற்ற மறிந்தார் துங்கர் போலும்

(ஏசையா)

   

1. தொழுவர் - இடையர்