பக்கம் எண் :

122செந்தமிழ்க் காஞ்சி

14 பரமண

14
பரமண்டல செபம்

'பொன்னார் மேனியனே' என்ற மெட்டு

   1. விண்ணார் மண்டலத்தில் - மிக - வீற்றிருக்கும் எந்தையே
  பண்ணார் உந்தன் நாமம் - பரி சுத்தப் படுவதாக
  கண்ணார் உம்மரசு - கடி - தாய்வருக வானில் உம்
  எண்ணே யாவதுபோல் - ஆக - இப்புவிமே லென்றுமே.
   
   2. அன்றே ஊணிடும் யாம் - எமக் - காகார்குற் றம்பொறுக்கும்
  நன்றே போலெமக்கும் - அருள் - நாதனே குற்றம்பொறும்
  தொன்றார் சோதனையும் - வருந் - துன்பமும் தீர்த்தருளும்
  மன்றே உம்முடைமை - ராச்சியம் - வல்லமை மாட்சி ஆமென்.

15
கவலைப்படாமை

'கலிலோ' என்ற மெட்டு

ப.

 
   
   மனமே நீ கவலையுறுவதினால் மருவின தென பெருமை முழ ஒருமை  
   

து. ப.

 
   
   தினமே தன்வினை செய்வ தருமை  
   தெரிவதோ தினமறுமை - வெகு சிறுமை

(மனமே)

   

உ.

 
   
   எனவோ நாம் உண்பது முடுப்பது மென்பதே யுனக்கேனோ  
   முனமாவி மெய்யுட னளித்தவன் முன்னவை மறுப்பானோ  
   வனமேவு பறவை தாவரமே வாழ்வன உயர்தரமே தேவகரமே

(மனமே)