பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 123

16

16

நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனைக் குணமாக்கினது

 

‘சுஜனஜீவனா‘ என்ற மெட்டு

 

ப.

 

    பரமநாதனே திருப் பதும பாதனே   ஏசு

து. ப.

    தரும போதனே பெருந்தவ விநோதனே

    அவதாரநீ யென்னில் சேரநான் ஒரு

        தகவில்1 லாதவன் ஏதும்    

(பரம)

 

உ.

 

    கோரமென்றன் வேலையாள் திமிர்வாத வேதனை

    கூறுமீண்டோர் வார்த்தை வினைஞன் குணமே பூரணம்

    வேறும் வேண்டுமோ என்றன் வீரர் நூறுபேர்

    எந்த வேளையும் வந்து போவாரே பிறர்

    வியஞ்செய்வேனுமே ஏவப்   

(பரம)

        1. இல்-வீடு

 

17

விதைக்கிறவன் உவமை

 

நொண்டிச்சிந்து

 

    கேளீர் உவமை யொன்று - முடியக்
    கிளக்கும் வரையும் உள்ளக் கிளர்ச்சியுடன்


    விதைக்கும்படி யுழவன் - ஒருவன்
    விதைக ளெடுத்துக்கொண்டு விரைந்து சென்றான்


    விதைக்கும் பொழுது சில - விதைகள்
    விழுந்தன புறமான வழியருகே


    பறவை பலவந்தே - அவற்றைப்
    பட்சித்தன முழுவதும் நட்டமாகவே