பக்கம் எண் :

124செந்தமிழ்க் காஞ்சி

கற
   கற்பாறை நிலத்து - விதைகள்
   கடிதில் முளைத்தன மண்காணாமல்
 
   வெயிலேறின போதோ - அவைகள்
   வெந்து கருகினவே வேரின்றி
 
   முள்ளா ரிடம்விழுந்த - விதையும்
   முளைக்கமுள் வளர்ந்ததை நெருக்கினதே
 
   பண்ணார் நன்னிலத்து - விதைகள்
   பத்தும்நூறு மாகப்பெரும் பலன்தந்தன
 
   விதைப்போன் மனுடமகன் - அந்த
   விதைகளும் விண்ணரசின் வசனங்களே
 
   நிலமோ மனிதர்மனம் - அதுவும்
   நிகழ்தரும் நால்வகை நிலையறிவீர்

18
காற்றையுங் கடலையு மதட்டினது

'மருகேலரா' என்ற மெட்டு

    ஜயந்த ஸ்ரீ                                 முன்னை (ஆதி)

ப.

 
   
   சரணாகதி சார்ந்த தேம் பதீ  
   

து. ப.

 
   
   சரணாவ தாரீ சருவாதி காரீ  
   புயன்மோ திவாரி பொரும் ஆதரி

(சரணா)

   

உ.

 
   
   கன்னிகை குமார கண்திறந்து பாரே  
   மன்னுலக மூட மலிதரங்க மையா  
   இன்னே மடிகின்றோம் என்னவே பன்னிருவர்  
   அந்நிலை கடிந்தாய் அலைமாருதம்

(சரணா)