பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 125

19

19

ஐந்தப்பங்கொண்டு ஐயாயிரவருக்கு உணவளித்தது

'அமரநபிமாரெ' என்ற மெட்டு

 

ப.

 
     
  மனமுருகுந் தனி மாலை வனாந்தரம்  
     
 

து. ப.

 
     
  சனம்பெருகும் இனிச்சால முகாந்தரம்  
  தினகரனே செலத் தீவிர மாந்தரம்

(மன)

     
 

உ.

 
     
   1. மாசனம் போகியே மருங்கு கிராமம்முன்  
  போசனம் நாடவே புகன்றனர் சீடரும்

(மன)

     
   2. போக வேண்டாமவர்க்குப் புதுவிருந்திடு மென்றே  
  ஈகையாண் டவர்கூற இருமீனைந் தப்ப மென்றார்

(மன)

     
   3. ஐம்பதைம்பது பேராய் அமர்த்தி யனைவரையும்  
  ஐந்தப்ப மிருமீனை ஐயன்ஆசீர் வதித்தார்

(மன)

     
   4. போதியவரை யுண்டு புடைக்க விலாவினூடே  
  மீதிய துணிக்கையும் மிகுந்த பன்னிரு கூடை

(மன)

     
   5. பெண்ணே பிள்ளை தவிரப் பெருவிருந் துண்டவர்கள்  
  எண்ணிலை யாயிரவர் இருந்ததாகக் கண்டனர்

(மன)

20
பிறவிக்குருடனுக்குப் பார்வையளித்தது

'காணக்கிடையாத தங்கம்' என்ற மெட்டு

ப.

 
   
   ஆனந்தப் பேறாமென் அங்கம் - பர  
   மானந்தப் பேறாமென் அங்கம் - அதை  
   
   மானுங் கரணமில்லை யெங்கம் - மதிவிளங்கும்

(ஆனந்த)