| தானான
தானதன தானதன தானதன |
|
| தானான
தானதன தானதன தானதன |
|
| தானான
தானதன தானதன தானதனந் தனதான |
|
| |
|
| ஈராறு
சீடர்களு மேசுவுன தாணையென |
|
| நேராக
வேகிபெத லேகமெனும் வூரதனில் |
|
| நாராரு
மாகழுதை யோடுமறி யேகொடுவந் |
தவைமேலே |
| |
|
| சீரான
சீரையணி வார்பணிய மாறரிய |
|
| வீராநல்
வீறுபெற வேறிவல சாரியினை |
|
| ஏராள
மானநரர் சீரைவிரி பாதைபுரிந் |
திதமாக |
| |
|
| வேறான
பேர்பசிய சாகைவழி பாவவிரு |
|
|
சாரார்கள் தாவிதுகு மாரபர நாமவரர் |
|
| ஓரோசை
யானதுதி யாருனத மோசனாவென் |
றுரைகூர |
| |
|
| மாராய
மாவெருச லேநகர வீதிகளில் |
|
| ஆராரு
மாரெனவி சாரணைசெய் வார்மருள |
|
| நேராளர்
மாறுநச ரேயகுரு வேசுவெனும் |
பெருமானே! |
| |
|
| நீராரு
வாவதியும் நேரறுத ணாறுமுகம் |
|
| ஏராக
வாலயம தேகியதி காரமொடு |
|
| சூரான
சூரனென மாறியக வாணிகரும் |
புறமாக |
| |
|
| வாரான
வாரடியி னால்வெருவி யோடிடவும் |
|
| மாறாடு
காசுபுற வோர்பலகை யாசனமு |
|
| மாறாக
ஓதுசெப வீடுகளர் மாகுகையென் |
குமரோனே! |
| |
|
| பாராத
பேர்முடவ ரோடுபிணி யாளர்பலர் |
|
| சீராக
நீசெய்தவ மாபுதுமை தாவிதுகு |
|
| மாராய
ஓசனவெ னோசையிடு பாலரொடுஞ் |
சினமாகி |
| |
|
| நேராத
பாரகர்பு ரோகிதரி தேனெனவும் |
|
| நீரோது
வேதமென ஓர்வசன மோதிவிரி |
|
| பாரான
வாழ்விலொரு மாவயவ ரானபரம் |
பொருளோனே! |