பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 127

22 பவன

22
பவனி

'வங்கார மார்பிலனி' என்ற மெட்டு

சந்தக்குழிப்பு

   தானான தானதன தானதன தானதன  
   தானான தானதன தானதன தானதன  
   தானான தானதன தானதன தானதனந் தனதான  
   
   ஈராறு சீடர்களு மேசுவுன தாணையென  
   நேராக வேகிபெத லேகமெனும் வூரதனில்  
   நாராரு மாகழுதை யோடுமறி யேகொடுவந்

தவைமேலே

   
   சீரான சீரையணி வார்பணிய மாறரிய  
   வீராநல் வீறுபெற வேறிவல சாரியினை  
   ஏராள மானநரர் சீரைவிரி பாதைபுரிந்

திதமாக

   
   வேறான பேர்பசிய சாகைவழி பாவவிரு  
   சாரார்கள் தாவிதுகு மாரபர நாமவரர்  
   ஓரோசை யானதுதி யாருனத மோசனாவென்

றுரைகூர

   
   மாராய மாவெருச லேநகர வீதிகளில்  
   ஆராரு மாரெனவி சாரணைசெய் வார்மருள  
   நேராளர் மாறுநச ரேயகுரு வேசுவெனும்

பெருமானே!

   
   நீராரு வாவதியும் நேரறுத ணாறுமுகம்  
   ஏராக வாலயம தேகியதி காரமொடு  
   சூரான சூரனென மாறியக வாணிகரும்

புறமாக

   
   வாரான வாரடியி னால்வெருவி யோடிடவும்  
   மாறாடு காசுபுற வோர்பலகை யாசனமு  
   மாறாக ஓதுசெப வீடுகளர் மாகுகையென்

குமரோனே!

   
   பாராத பேர்முடவ ரோடுபிணி யாளர்பலர்  
   சீராக நீசெய்தவ மாபுதுமை தாவிதுகு  
   மாராய ஓசனவெ னோசையிடு பாலரொடுஞ்

சினமாகி

   
   நேராத பாரகர்பு ரோகிதரி தேனெனவும்  
   நீரோது வேதமென ஓர்வசன மோதிவிரி  
   பாரான வாழ்விலொரு மாவயவ ரானபரம்

பொருளோனே!