பக்கம் எண் :

செந்தமிழ்க் காஞ்சி 135

28

28

பேதுரு மனங்கசந் தழுதது

'தியானமே வரமைன' என்ற மெட்டு

தன்யாசி - முன்னை (ஆதி)

   
   பாவிநான் பரமையன் பங்கே பாகமும் பருகாத் துரோகி

(பாவி)

   

து.ப.

 
   
   சேவல் கூவு முனமே மும்முறை தேவ  
   கோவை மறுத்தேன் கொடிதென் பாவக் குறைமேவ

(பாவி)

   

உ.

 
   
   கரணமே வேகும் கசந்தழு மேகம்  
   கரைகொன்றது வெள்ளம் கரைந்தெவ னாகும்  
   மருவுவென் ஏசு மாதவன் பாதம்  
   மன்னிப்பு மாகும் மறவே னொருபோதும்

(பாவி)

29

பொந்தியுப்பிலாத்தின் விசாரணை

ஏசுவின் மரணாக்கினை

'செந்தில்மா நகர்' என்ற மெட்டு

   பஞ்சபாதக மிஞ்சிய யூதரும்
   பானு வெழுந்தபின் கூடி - ஏசு
   வானவனைக் கொல்ல நாடி - மிகு
   பந்தனத்தொடு பொந்தியுப் பிலாத்
   தின்கரத்திடை கொண்டுவிட்டனர்
   பங்கமா மரணந்தனுக் காளான
   பண்ணவன் தீர்ப்பினைக் கண்டு - யூதாசு
   பாதக னுந்துயர் கொண்டு